Saturday, February 20, 2016

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்?



Written by Niranjana 

அன்னதானம், பால், தயிர் இவற்றை தானம் செய்தால் மனம் நிம்மதியடையும், வாக்கு பலிதம் உண்டாகும், உடல் ஆரோக்கியம் பெரும். தீவினை கர்மாக்கள் நீங்கும்.

வஸ்திர தானம் செய்தால், ஆயுள் விருத்தி உண்டாகும். மானம் காக்கப்படும்.

உப்பு. வெல்லம் இவைகளை தானம் செய்தால், சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.

பூசணிக்காயை தானம் செய்தால், சகல வியாதிகளும் விலகும். பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும்,  இஷ்ட சித்தி கைக்கூடும்.

ஏழை கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால், இதுவரையில் எடுத்த அனைத்து ஜென்மங்களின் பாவங்கள் நிவர்த்தியாகும்.

இசை வாத்திய கருவிகளை தானம் செய்தால், இந்திரனுக்கு நிகரான சுகபோகமான வாழ்க்கை அமையும்

பொன் தானம், மோச்சத்தை கொடுக்கும்.

தைலம், பருத்தி, துணி,பால் போன்றவை தானம் செய்தால், குஷ்ட ரோகம் உட்பட உடலில் இருக்கும் அனைத்து ரோகங்களும் நீங்கும்.

தீப தானம் செய்தால் கண் பார்வை பலப்படும். நல்ல எதிர்காலம் தேடி வரும். பிரச்னைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.

தயிர்சாதம் தானம் செய்தால் நல்ல பிள்ளைகளை பெறுவீர்கள். பிள்ளைகளின்  எதிர்காலமும் மகிழ்சியாக அமையும்.

தேன், பொன், நெய்தானம் செய்தால் சகல போகங்களையும் அனுபவிப்பார்கள்.

இரும்பு, எண்ணை, உளுந்து, பழங்கள், நீர் இவைகளை தானம் செய்தால், கஷ்டங்கள் விலகும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நவகிரக தோஷத்தை நீக்கும் நவதானியங்கள்

சூரியன்
சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். அரசாங்க தொல்லை தீரும். கண்பார்வை வலு பெறும். அரசாங்க ஆதரவும் கிடைக்கும்.

சந்திரன்
சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். தேய்பிறையாக இல்லாமல், வாழ்க்கை வளர்பிறையாக பிரகாசிக்கும்.

செவ்வாய்  
செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.

புதன்
புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

குரு
குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் விரையில் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்க நகை வியபாரத்தில் ஜொலிக்கலாம்.

சுக்கிரன்
சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். கலைதுறையில் சாதிப்பார்கள். பணவரவு சுலபமாக அமையும். திருமண பாக்கியம் அமையும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

சனி
சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். இரும்பு வியபாரம், கனரக தொழில்சாலை, எண்ணெய் வியபாரத்தில் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்க்கலாம். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.

இராகு
இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு. கேளிக்கைகளில் பொருள் சேரும். சொகுசான வாழ்க்கை அமையும். வெளிநாடு தொடர்புகளால் முன்னேற்றம் தரும்.

கேது
கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும். கல்வி ஞானம் அதிகரிக்கும். பெயர்-புகழ் கிடைக்கும். வெளிநாடு பயணங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர் அந்தஸ்து கிடைக்கும். திருமண தடையும், புத்திர பாக்கிய தடையும் நீக்கும். கௌரவமான வாழ்க்கை தரும்.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved