Sunday, July 8, 2018

அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும்


Written by NIRANJANA
காரணம் இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதை அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் சமைத்து படைப்பார்கள். கூழ் அம்மனுக்கு பிடிக்கும்.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.


சரி கூழ் எதற்காக படைக்கிறார்கள்? என்ற காரணத்தையும் அறிய வேண்டுமல்லவா.

ஆடி மாதம் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள். அதாவது தீ மிதிப்பார்கள். அப்போது தீ மிதிக்கும் பக்தர்களின் உடலில் அம்மன் இறங்குவார். அந்த பக்தனின் உருவத்தில் அம்மனே தீ மிதிப்பார். இதனால்தான் பல அடி தூரம் கொண்ட தீயில் பக்தர்கள் நடக்கும்போது அவர்களின் பாதத்திற்கு எந்த தீ கொப்பளங்களும் ஏற்படுவதில்லை.

ஆடி மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால் அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும். அதை தணிக்கவே குளிர்ச்சியான தன்மைகொண்ட கேழ்வரகை அரைத்து, அத்துடன் நொய் அரிசியை கலந்து கூழ் தயாரித்து அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உருவானது.

இப்போது தெரிந்துக்கொண்ட்டீர்களா ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் வைக்கிறார்கள் என்று.

தன் பக்தர்கள்  ஏழ்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தினமும் சாப்பிடும் கூழை தனக்கு பிடித்த உணவாக மாற்றிக்கொண்டாள் அன்னை.  அம்மனுக்கு கூழ் படைத்தால் அந்த பக்தர்களில் வாழ்க்கை வசந்தமாக மாறும்!

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, July 5, 2018

பள்ளத்தில் இருப்பவர்களை பல்லாக்கில் உட்கார வைக்கும் இராகு-கேது


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவருடைய ஜாதகத்தில் இராகுகேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம்.

தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள்.

கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களேகேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.”  என்கிறார் கேது பகவான்.

அது எப்படி என பார்ப்போம்.

பாம்பை பிடித்து யோகத்தை சொல்லு.

சனியை பிடித்து மாரகத்தை சொல்லு.
என்பது ஜோதிட பொன்மொழி.

ஒருவரின் ஜாதகம் பணக்கார ஜாதகமா? கோடீஸ்வர ஜாதகமா? என்பதை தெரிந்துக்கொள்ள, ஜாதகத்தில் இராகுகேதுவின் நிலையை கணித்து பார்க்க வேண்டும். இராகுகேது அமர்ந்த இடத்தின் அதிபதி, லக்கினத்திற்கு 2,4,5,9,10,11-ல் இருந்தாலும், அதனை குரு பார்த்தாலும் செல்வத்தை வாரி வழங்குகிறார். அதேபோல இராகுவும் செய்கிறார்.

உதாரணமாக, ஒருவருக்கு ரிஷப லக்கினமாக அமைந்து, கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியன் புதன்.

இந்த புதன், மகரத்தில் அதாவது 9-ல் குருவோடு சேர்ந்திருந்தாலும், குரு பார்த்தாலும் அவன் செல்வந்தன். அதுபோல, கடக லக்கினமாக இருந்து, 8-ல் கேது, அந்த வீட்டுக்குரியவன் சனி உச்சம் பெற்று துலாவில் இருந்தாலும் அவர்கள் செல்வந்தர்களே. அதுபோல, சிம்ம லக்கினமாக இருந்து கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியவன் புதன், 5-ல் இருந்தாலும் தனவான்களே.

அதேபோல், குருகேது சேர்க்கை, குரு -இராகு சேர்க்கை ஆகிய இந்த கூட்டணி கிரகங்களும் அந்த ஜாதகரை செல்வந்தனாக்குகிறது.

என் அனுபவ ஆராய்ச்சியில், இராகு 1,4,7,10-ல் இருந்து திசை நடைபெற்றால், யோகத்தையே செய்கிறது. பள்ளத்தில் இருப்பவனை பல்லாக்கில் உட்கார வைக்கிறது. பொதுவாக கேது, கெடுப்பான்  கெடுப்பான் என்று கூறி அலறுவதை விட, கேது, கொடுப்பான் கொடுப்பான் என்று கூறுவதே சரியாகும்.

அதாவது, இராகுவோ கேதுவோ அமர்ந்த இடத்தின் அதிபதி, ஆட்சிஉச்சம் பெற்றாலும், 2,4,5,7,10,11-ல் இருந்தாலும் யோகமே செய்யும்.

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel


For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved