Saturday, February 20, 2016

கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகற்றும் தாமரை தீபம்



Written by Niranjana 
மகாலஷ்மிக்கு யாகம் செய்யும் போது தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து யாகத்தில் போட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது. யாகங்கள் செய்ய இயலாதவர்கள், இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு நெய் தீபம் ஏற்றி வைத்து மகாலஷ்மிக்குரிய மந்திரத்தை உச்சரித்தால், ஸ்ரீ மகாலஷ்மி ஆனந்தம் அடைந்து, சகல பாக்கியங்களையும் கொடுப்பாள்.

யாகத்தில் தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து போட்டாலும் அல்லது இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு நெய் தீபம் ஏற்றினாலும் நிச்சயம் பலன் கிடைக்கும். இதனால் கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகன்று உள்ளத்திலும், இல்லத்திலும் சந்தோஷத்தை உருவாக்குவாள் ஸ்ரீமகாலஷ்மி. பின்வரும் மந்திரத்தை மாலையில் விளக்கு ஏற்றும் நேரத்தில் உச்சரித்தால் போதும். மந்திரத்தை உச்சரித்து விளக்கினை ஏற்றினால் பலன் விரைவில் பெறலாம்.

மகா தேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்னீ தீமஹி
தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved