Thursday, September 19, 2013

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு!

Written by Niranjana
சென்னைய திருவல்லிக்கேணியில் மெரீனா கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது பார்த்தசாரதி திருக்கோயில்.

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு

துண்டீரன் என்ற நாட்டில் சுமதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவ்வரசன் பெருமாளின் தீவிர பக்தன். பெருமாள், பாரதப்போரில் தேரோட்டியாகப் பணியாற்றியபோது இருந்த உருவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அரசனுக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை ஆத்ரேய முனிவரிடம் கூறினார்.

அரசனேநீயே சிறந்த விஷ்ணு பக்தன். நீ விரும்பியபடி உனக்கு அவர் காட்சி கொடுக்கமாட்டாரா என்ன? நீ திருவல்லிக்கேணிக்கு செல். செவ்வரல்லி நிறைந்து இருக்கும் பகுதி அது. அதனால் அந்த இடத்தில் நல்ல நறுமனம் வீசும். இப்படி நறுமனம் இருக்கும் இடத்தில்தான் பெருமாள் விரும்பி காட்சி கொடுப்பார். அங்கே நீ சென்று தவம் செய்.” என்றார்.

முனிவர் சொன்னது போல் அரசன் சுமதி தவம் செய்தார். தவத்தை ஏற்று பெருமாள் பார்த்தசாரதி உருவத்தில் காட்சி தந்தார். பார்த்தனை பார்த்து ஆனந்தம் அடைந்த அரசர், “நீங்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

பார்த்தனுக்காக வந்தாள் வேதவல்லி

பிருகு முனிவர் கடும் தவம் செய்து, ஸ்ரீமகாலஷ்மி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். அவர் விருப்பப்படி லஷ்மிதேவி சந்தன காட்டில் குழந்தையாக அவதரித்தாள். அந்த குழந்தையை மகளாக ஏற்று பிருகு முனிவர் வளர்த்து வந்தார். பருவ வயதை அடைந்த வேதவல்லி, பெருமாளுக்கு மலர் பறிப்பதற்காக நந்தவனத்திற்கு சென்றாள். அப்போது பெருமாள் வேதவல்லியை விரும்பி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் திருமணம செய்து கொண்டு திருவல்லிகேணிக்கு அழைத்துவந்தார்.

திருவல்லிக்கேணி வந்த ஸ்ரீராமர்
 
பாண்டாரம் என்ற முனிவருக்கும் ஹேலை என்ற வானுலக பெண்ணுக்கும் பிறந்தவர் மதுமான். இவர் ஸ்ரீராமரை நினைத்து தவம் செய்தார். ஸ்ரீராமர் மதுமானுக்கு காட்சி கொடுத்தார். தன் பக்தன் மதுமானின் விருப்பத்திற்கேற்ப சீதையையும் லட்சுமனனை அழைத்து கொண்டு திருவல்லிகேணியில் குடிபுகுந்தார் ஸ்ரீராமர். இராமருக்கு துணையாக அனுமனும் திருவல்லிக்கேணி வந்து, நமக்கும் துணை இருக்கிறார்.

பார்த்தசாரதியும், ஸ்ரீராமரும் சாந்த கடவுளாக இருக்க, உக்கிர கடவுள் நரசிம்மரை அழைத்து வந்தவர் இவர். காரணம்….? 

அத்ரி முனிவர் திருவல்லிக்கேணியில்…மேலும் படிக்க