Thursday, September 19, 2013

திருமலை மகத்துவம்

Written by Niranjana


ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது. அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். 

ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தையை உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி உத்தரவிட்டார். ஆனால் யாரும் குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. “எல்லாம் இறைவன் செயல். இந்த குழந்தையை என் மகளாக ஏற்று நானே வளர்ப்பேன்.“ என்று முடிவெடுத்து அந்த குழந்தைக்கு “பத்மாவதி“ என்று பெயரிட்டார் அரசர். 

குழந்தை பருவத்தில் இருந்து பத்மாவதி மங்கை பருவம் அடைந்தாள். தான் யார் என்பதை உணர்ந்து, பெருமாளுடன் திரும்பவும் ஒன்று சேர தவம் இருந்தாள். வேங்கடேச பெருமாள், திருப்பதி மலை மீது தோன்றி தன் உடன் இருந்த வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் அனுப்பி பெண் கேட்டு தூது அனுப்பினார். வெங்கடாசலபதியே மருமகனாக வர இருப்பதை தடுப்பாரா அரசர்?. தன் மகளின் விருப்பத்தையும் தெரிந்த மன்னர், பெருமாளுக்கு பெண் தர சம்மதம் தெரிவித்தார். 

அரசருடைய மகளை திருமணம் செய்வதால் அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது திருமணத்திற்கு தன் சார்பிலும் கல்யாண செலவு செய்ய வேண்டும் என்று விரும்பி குபேரரிடம் கடன் பெற்றார் பெருமாள். Bhakthi Planetதிருமணமும் பிரமாண்டமாக நடந்தது. 

ஒரே மகள் என்பதால் சீர்வரிசையை அள்ளி கொடுத்தார் அரசர். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் சீர் பொருட்கள் இருந்தாலும், சமையல் பொருட்களில் கருவேப்பிலை இல்லாததை கண்டார் பெருமாள்…மேலும் படிக்க