Thursday, September 19, 2013

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்

Written by Niranjana

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது அருள்மிகு தசாவதாரக் கோயில்.

பெரியவர்களின் சொல்லே பெருமாளின் சொல் 

பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போலஎன்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?-தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள். அதனால்தான்பெரியவர்களின் சொல், பெருமாளின் சொல்என்கிறார்கள். ஸ்ரீமந் நாராயண பெருமாள், கிருஷ்ணஅவதரம் மட்டும் எடுத்து மக்களுக்கு அறிவுரை கூறவில்லை. நமக்காகவே-நம் நன்மைக்காகவே அவதாரங்கள் எடுத்து வந்தவர். அதனால் அவருக்கு அனுபவம் ஜாஸ்தி.

எப்போது உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பேன்.” என்பது பகவானின் வாக்கு. பெருமாளின் அவதாரங்கள் பத்து. அதுவேதசாவதாரம்என்கிறோம்.

அவை, மச்சவதாரம்கூர்மா அவதாரம்வராக அவதாரம்நரசிம்மா அவதாரம்வாமன அவதாரம்பரசுராம அவதாரம்ராமவதாரம்பலராம அவதாரம்ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம்கல்கி அவதாரம் ஆகிய பத்து அவதாரங்கள் உள்ளன. இதில் இன்னும் கல்கி அவதாரத்தை பெருமாள் எடுக்கவில்லை. அதாவது, இந்த கலியுகத்தில் தர்மம் இன்னும் அழியவில்லை. அது கொஞ்சமாவது இருக்கிறது.

ஆகவே, பெருமாளின் அவதாரங்கள் உலக மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது.

கோவில் உருவான கதை  

பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், நமக்கு பெருமாள் பாசுரங்களை இயற்றி தந்தார். அவர் வாழ்வில் ஒரு சம்பவம். ..மேலும் படிக்க

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்