Sunday, January 17, 2016

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2016 – 2017





Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  


அன்பார்ந்த பக்தி பிளானெட் வாசகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த 08.01.2016 அன்று இராகு கேது பெயர்ச்சி நடைப்பெற்றது. திருக்கணிதப் பஞ்சாங்கபடி 29.01.2016 சனிக்கிழமை இரவு 11.30-க்கு இராகு கேது பெயர்ச்சி ஆகிறது. ஏன் இந்த வேறுபாடு?. இதில் குழப்பம் ஒன்றுமில்லை. வாக்கிய பஞ்சாங்கபடி, கிரகங்கள் பெயர்ச்சி பெறும் நிலையும், பெயர்ச்சி பெற்ற கிரகம் பலன் தருவது எப்போது? என்பதை திருக்கணிதப் பஞ்சாங்கமும் சொல்கிறது. ஆகவேதான் நாம், கிரக சஞ்சார நிலையை விட அந்த கிரகம் பலன் தரும் செயலே முக்கியமானது என்கிற கருத்தின் அடிப்படையில் திருக்கணிதப் பஞ்சாங்க முறையை அனுசரிக்கிறோம். அதன்படி, 29.01.2016-இல் பெயர்ச்சியாகும் இராகு கேது, பன்னிரெண்டு இராசிகாரர்களுக்கும் என்னென்ன பலன்களை தரப் போகிறார்கள்? என்று பார்ப்போம். இந்த வருடம் இராகு பகவான், சூரியன் காலிலும் அதாவது சாரத்திலும், கேது பகவான், குருவின் சாரத்திலும் வருவதால் நன்மைகள் அதிகம் செய்யும். பொதுவாக, மற்ற கிரகங்கள் முன்னோக்கியே செல்லும். ஆனால் இராகுவும், கேதுவும் பின்னோக்கி நகரும் சிறப்புக்குரியது. அந்த வகையில், கன்னியில் இருந்து சிம்மத்திற்கு இராகுவும், மீனத்தில் இருந்து கும்பத்திற்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள். இராகு கேது பெயர்ச்சியால் இவர்கள் நாட்டுக்கு நன்மையே செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம். அவர்கள் எல்லா வளங்களையும் தந்திட பிராத்தனை செய்வோம்.

மேஷ இராசி அன்பர்களே... உங்கள் இராசிக்கு 5-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், 11-ஆம் இடத்திற்கு கேது பகவானும் வருகிறார்கள். அதாவது, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்
உங்கள் இராசிக்கு 5-இல் வரும் இராகு எதிர்பாரா தனப் பிராப்தி, உத்தியோக உயர்வு, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் இப்படி இன்னும் எதிர்பாரா யோகங்களை கொடுக்கப் போகிறார். சூரியனின் சாரத்தில் வருவதால், ஆரம்பமே அமர்களமாக இருக்கப் போகிறது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் பிரச்னை இருந்தால் தீர்வு பெற்று, சொத்துக்கள் உங்கள் கைக்கு வந்து விடும். அரசாங்க வேலை கிடைக்க சிலருக்கு வாய்ப்பிருக்கிறது. வீடு கட்ட வங்கி கடன் தாராளமாக கிடைக்கும். பெற்றோருக்கு பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

கேது தரும் பலன்
      உங்கள் இராசிக்கு 11-இல் வரும் கேது பகவான் என்ன செய்ய போகிறார்? எனப் பார்த்தால், கடல் கடந்த பயணம், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு, பிள்ளைகளுக்கு திருமணம் போன்றவற்றை நடத்தி வைப்பார். கேது, குருவின் சாரத்தில் இருப்பதால் சுபங்களை வழங்குவார். அதே குரு விரயாதிபதியாக இருக்கின்ற காரணத்தால் சிறு,சிறு விரயங்களையும் குடும்பத்திற்காக செய்ய வைப்பார். யாராவது தேவையில்லாமல் சச்சரவுகளுக்கு வந்தால் அமைதியாக இருந்து விடுங்கள். இல்லையெனில் தேவையற்ற பிரச்னை உருவாகும். கேது அமைகிற சாரம் பாக்கியாதிபதி சாரமாகவும் இருப்பதால், பல தெய்வ தரிசனங்கள் செய்கின்ற பாக்கியம் கிடைக்கும். பெரிய பதவிகளில் இருப்பவர் உதவி, தனவந்தர்களின் ஆதரவு தேடி வரும். பொதுவாக ஆரம்பமே இராகு சூரியன் காலிலும், கேது, குருவின் காலிலும் வருவதால் யோகங்கள் உங்கள் தேடி வந்தமையும்.

ரிஷப இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு சுகஸ்தானம் என்னும் 4-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், ஜீவனஸ்தானம் என்னும் 10-ஆம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்
       சுகஸ்தானத்தில் வரும் இராகு வீடு, மனை வாங்கும் யோகத்தை தரப் போகிறார். சிலர் கூறுவார்கள், 4-இல் இராகு வந்தால் சுகத்தை கெடுக்கும் என்று. ஆனால் இராகு வர இருப்பது சூரியன் காலில் (சாரத்தில்). ஆகவே ரிஷப இராசிக்கு சூரியன் யோகக்காரகன். வாகனம், வசதிகள் என மகழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்கப் போகிறார். தடைப்பட்ட கல்வி தொடரும். இதுவரையில் தமக்கென சொந்த வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு வாங்கும் யோகத்தை தரப் போகிறார். “நான்கு இடம் போய் வந்தேன், நன்றாக சம்பாதித்து வந்தேன்என்று இனி நீங்கள் கூறப் போகிறீர்கள். உற்றார்-உறவினர் வருகை இருக்கும். அரசாங்கத்தால் சிலர் உதவி பெறுவார்கள். நீண்ட காலம் இருந்த கட்டப்படாத கட்டடம் கட்டி முடிக்கப் பெறும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சகோதர ஸ்தானத்திற்கு 2-இல் இராகு இருப்பதால் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பார்.

கேது தரும் பலன்
       சரி, கேது பகவான் தரப் போகிற பலன் என்ன? என்று பார்த்தால், குரு காலில் (சாரத்தில்) வரும் கேது பகவான், புதிய தொழில் ஆரம்பம் செய்ய வைப்பார். மூடி இருந்த தொழில்சாலை திறக்க சந்தர்ப்பம் வரும். வழக்கு ஏதேனும் இருந்தால் வெற்றி பெறும். தேவையில்லாமல் கடன் வாங்க வைப்பார். கிரேடிட் கார்டு இருந்தால் கண்ணில்படாமல் வைத்துக் கொள்ளுங்கள். கையில் இருந்தாலும், உங்கள் பையில் இருந்தாலும் தேய்து, தேய்து கடனாளி ஆகி வீடுவீர்கள். காரணம் குரு, லாபாதிபதி காலில் வந்தாலும், அவனே அஷ்டமாதிபதியும் ஆகிறான். ஆகவே கொடுக்கல்-வாங்கலில் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இந்த இராகு-கேது பெயர்ச்சி சுபநிகழ்ச்சிகளையும் நடத்தி வைக்கும்.

மிதுன இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு இராகு 3-ஆம் இடத்திற்கும், கேது பகவான் பாக்கியஸ்தானம் என்னும் 9-ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகி வருகிறார்.
இராகு தரும் பலன்
       கீர்த்தி ஸ்தானம் என்கிற 3-ஆம் இடத்தில் வரும் இராகு, தூங்கி கொண்டிருந்த உங்களை தட்டி எழுப்புவார். உற்சாகம் பிறக்கும். செய்யவே முடியாத காரியத்தை செய்து பாராட்டு பெறுவீர்கள். உங்களை மதிக்காதவர்கள் கூட மதிக்கத் தொடங்குவார்கள். தடைப்பட்ட திருமணம் கைகூடும். சிறு,சிறு பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும். தொழில்துறையில் முன்னேற்றம் கூடும். கூட்டாளிகள் உங்கள் வாக்கை தெய்வ வாக்காக எடுத்துக் கொள்வார்கள். பழைய கடன் தீரும். வழக்கு தொல்லைகள் பஞ்சு போல் பறந்து போகும். சகோதரர்களால் நன்மை உண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். இராகு சூரியன் காலில் (சாரத்தில்) வருவதால், கணக்கு வழக்குகளில் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

கேது தரும் பலன்
       உங்கள் இராசிக்கு 9-இல் வருகிற கேது பகவான் என்ன செய்யப் போகிறார்? என்று பார்த்தால், தெய்வ பக்தி அதிகம் கொடுப்பார். எல்லாம் அவன் செயல் என்று சொல்ல வைப்பார். ஜாமீன் கையெழுத்து எதிலும் போட வேண்டாம். காரணம் என்னவென்றால், பாதகாதிபதி குருவின் காலில் (சாரத்தில்) கேது வந்திருக்கிறார். ஆகவே எதிலும் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்து வைப்பார். எந்த சொத்தை வாங்கினாலும் நன்றாக யோசித்து சட்ட நிபுணர்களிடம் காட்டி சரி பார்த்து பிறகு வாங்கவும். “என்ன ஸார், இராகு பிரமாதமாக கொடுப்பார் என்று கூறி விட்டு, கேது தரும் பலனில் பயமுறுத்துகிறீர்களேஎன்று நினைக்க வேண்டாம். “இராகு வாரி கொடுப்பான், கேது கெடுத்து கொடுப்பான்“. ஆகவே பாதகாதிபதி சாரத்தில் கேது வருவதால், கிரைனெட் பதித்த தரையில் எப்படி மெள்ள நடந்து போகிறோமோ அப்படி நிதானமாக செயல்படுவது நல்லது. பொதுவாக இந்த இராகு-கேது பெயர்ச்சி நன்மையே செய்யும்.

கடக இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு இராகு பகவான், தனஸ்தானம் என்னும் 2-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான், அஷ்டம ஸ்தானம் என்னும் 8-ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி வருகிறார்.
இராகு தரும் பலன்
       உங்கள் இராசிக்கு 2-ஆம் இடத்திற்கு வரும் இராகு என்ன செய்யப் போகிறார்? எனப் பார்த்தால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தருவார். சூரியன் காலில் (சாரத்தில்) வருவதால் தன-தான்யம் வாரி வழங்குவார். வாக்கு பலிதம் தருவார். குழப்பமாக இருந்த கூட்டு குடும்பம், கை கோர்த்து மகிழ்ச்சியாக இருக்கும். பட்ட கடன் பஞ்சாக பறந்து போகும். நீண்ட காலம் இருந்த நோய் நொடிகள் தீரும். அவசரப்பட்டு வாக்கு கொடுக்க வேண்டாம். ஆகவே பேச்சில் கவனமாக இருங்கள். வேலைக்கு அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கைக்கு வரும். ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கப் பெறும். காசு இல்லையே என்ற கவலை வேண்டாம். கடைசி நிமிடத்தில் கைக்கு பணம் வந்து விடும்.

கேது தரும் பலன்
       சரி, உங்கள் இராசிக்கு 8-இல் வரும் கேது என்ன பலன் தரப் போகிறார்? என்றால், அஷ்டம கேது ஆட்டி படைக்கும் என்று பலர் பயந்து நடுங்குவார்கள். இங்கு கேது, குரு காலில் (சாரத்தில்) வருவதை கவனிக்க வேண்டும். பாக்கியாதிபதி காலில் வருவதால், நன்மைகளை வாரி வழங்குவார். நீண்ட காலங்களாக இருந்த கடன் தீரும். சொத்துக்களை வாங்க வைப்பார். பெரிய மனிதர்களின் நட்பும், அவர்களின் உதவியும் கிடைக்கும். எதிர்பாரா உதவிகள் நண்பர்களின் மூலமாகவும் கிடைக்கப் பெறுவீர்கள். இவ்வளவு கொடுக்கும் கேது சற்று உழைப்பையும் அதிகமாக கொடுப்பார். தேவையற்ற செலவும் செய்ய வைப்பார். உடல்நலனில் அக்கரையுடன் இருங்கள். இந்த இராகு-கேது பெயர்ச்சி நன்மைகளை அதிகம் வாரி வழங்கும்.

சிம்ம இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு ஜென்மத்தில், அதாவது உங்கள் இராசியிலேயே இராகு பகவானும், சப்தமஸ்தானம் என்னும் 7-ஆம் இடத்தில் கேது பகவானும் பெயர்ச்சி ஆகி வருகிறார்கள்.

இராகு தரும் பலன்

       ஜென்ம இராகு நன்மை செய்யுமா? என்று பார்த்தால், நன்மையே செய்யும். சூரியன் சாரத்தில் வருவதால், நினைத்ததை முடித்து விடுவீர்கள். முன்னேற வேண்டும் என்ற உத்வேகம் அதிகம் கொடுக்கும். முட்டுகட்டைகள் முறிந்து போகும். நண்பர்களால் திருப்பம் ஏற்படும். சுயதொழில்களில் எதிர்பாரா முன்னேற்றம் உண்டு. பகை அகலும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஜென்ம இராகு உங்களுக்குரிய துணையை காட்டி மணமக்கள் மாலையை சூட வைப்பார். பெற்றோருக்கு மனதில் உற்சாகம் ஏற்படும். பல நாட்களாக போட்ட திட்டங்கள் வெற்றி பெறும். பொன்-பொருள், ஆபரண சேர்க்கை ஏற்படும். ஜென்ம இராகு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இதுவரை போராடி வந்த நீங்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் துவங்க வழி வகுப்பீர்கள். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்கும். வீடு, வாகனங்கள் புதுப்பிக்க செலவு ஏற்படலாம். உடல்நலனில் கவனம் தேவை. பொருளாதார வளர்ச்சி நன்கு அமையும்.

கேது தரும் பலன்

       சரி, சப்தம கேது என்ன செய்யப் போகிறார்?. தடைகளை தாண்டி வர சிந்திக்க வைப்பார். மனைவி, மக்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்க வைப்பார். சர்ச்சைக்குள் இழுத்து செல்வார். நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். விரோதங்கள் தேடி வரும். வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே பொறுமை, நிதானம் தேவை. குருவின் காலில் (சாரத்தில்) கேது வருவதால், விரோதங்களும் மேக ஓட்டம் போல் ஓடி விடும். பொதுவாக இந்த இராகு-கேது பெயர்ச்சி, தளர்ச்சியை நீக்கி உங்கள் முயற்சியால் வளர்ச்சியை காண வைப்பார். வெற்றிகள் தேடி வரும்.

கன்னி இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு சயனஸ்தானம் என்னும் 12-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், சத்ரு ஸ்தானம் என்னும் 6-ஆம் இடத்திற்கு கேது பகவானும் சஞ்சரிக்க இருக்கிறார்கள்.

இராகு தரும் பலன்

       உங்கள் இராசிக்கு 12-இல் வரும் இராகு உங்களுக்கு என்ன பலனை தருவார்? என்று பார்ப்போம். சூரியன் காலில் (சாரத்தில்) வருகிற இராகு பகவான், இதுநாள் வரை அலைந்து, திரிந்து கொண்டிருந்த உங்களை நிலையான இடத்தில் அமர வைப்பார். தூரத்து விவகாரங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய தொழில் துவங்க வழி வகுப்பார். சகோதர, சகோதரி வழியில் இருந்த பிரச்னைகளை உங்கள் மூலமாக தீர்த்து வைப்பார். மேல் படிப்பு படித்து, நல்ல உத்தியோகத்திற்கு செல்ல வைப்பார். சிலர் அயல்நாட்டு வேலைக்கும் போக வாய்ப்பு உருவாக்கி தருவார். தெய்வ காரியங்களுக்கு செலவுகள் அதிகம் செய்ய வேண்டியது இருக்கும். குடும்ப சூழ்நிலையில் சற்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். செலவுகள் அதிகம் ஆகும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தரும். புதிய நண்பர்களால் எதிர்பாராமல் உதவிகளை பெறுவீர்கள்.

கேது தரும் பலன்

       சரி, கேது பகவான் என்ன செய்யப் போகிறார்? என்று பார்ப்போம். குரு காலில் (சாரத்தில்) வரும் கேது பகவான், மனைவி வழியில் செலவு வைப்பார். சிலருக்கு பதவி உயர்வு கொடுப்பார். சொத்து விஷயத்தில் பிரச்னை இருந்தால் தீர்த்து வைப்பார். கடன் தொல்லை சற்று குறைய செய்வார். வண்டி, வாகன விஷயத்தில் கவனத்துடன் இருங்கள். பிராயண விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டாளிகள் சம்மந்தமாக யோசித்து செய்ய வேண்டும். சிலருக்கு கல்வி தடைப்பட்டாலும் மேல் படிப்பு படிக்க வழி வகுக்கும். முக்கியமாக, கிடைக்கின்ற பணத்தை சேமித்து வையுங்கள். செலவு அதிகம் இழுத்துக் கொண்டு போகும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சியால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

துலா இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு இராகு பகவான், லாபஸ்தானம் என்னும் 11-ஆம் வீட்டிற்கும், கேது பகவான், பஞ்சமஸ்தானம் என்னும் 5-ஆம் வீட்டிற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்

       உங்கள் இராசிக்கு 11-ஆம் இடத்திற்கு வரும் இராகு பகவான் என்ன செய்யப் போகிறார்? என்று பார்த்தால், லாபத்தை வாரி வழங்கப் போகிறார். சூரியன் சாரத்தில் இராகு அமர்வதால், லாபத்திற்கு பஞ்சமே இல்லை. தொட்டது துலங்கும். “நான் எதிர்பார்க்கவே இல்லை, எல்லாம் நல்ல படியாக அமைந்ததுஎன்று கூற வைப்பார். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் போன்று சகல விதத்தில் நன்மைகளை செய்வார். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்னைகளை தீர்த்து வைப்பார். வண்டி, வாகனம், வீடு, மனை வாங்க வைப்பார். பொதுவாக இந்த பெயர்ச்சியில் இராகு பகவான், சகல விதத்தில் நன்மைகளை செய்வார். 11-ஆம் பாவம், மூத்த சகோதர, சகோதரிகளுக்கு உரிய இடமாகும். அதுவே லாபஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. மூத்த சகோதர, சகோதரிகளின் உடல்நலனில் சற்று கவனம் தேவை.

கேது தரும் பலன்

       சரி, உங்கள் இராசிக்கு கேது பகவான் என்ன செய்யப் போகிறார்?. பஞ்சம கேது, குருவின் காலில் (சாரத்தில்) வருவதால், ஞானத்தை அதிகம் கொடுப்பார். தேவையில்லா சில சிந்தனைகளையும் யோசிக்க வைப்பார். சிந்தனைகளை சிதறடிக்காமல் வைத்திருங்கள். மனதில் தோன்றியதை செய்ய வேண்டும் என்ன எண்ணத்தை தூண்ட செய்வார். உத்தியோக மாற்றமும் கொடுப்பார். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மனதிற்கு பிடித்ததை செய்யாதீர்கள். புத்திக்கு வேலை தந்து யோசித்து செய்யுங்கள். நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. பொதுவாக, 5-ஆம் இடத்திற்கு வந்திருக்கிற கேது பகவான் சற்று சலனத்தை கொடுப்பார். ஆக, இராகுவின் துணை இருக்கிறது பயம் வேண்டாம். பஞ்சம கேது குருவின் சாரத்தில் இருப்பதால் எல்லாம் நல்லபடியாக அமையும்.

விருச்சிக இராசி அன்பர்களே உங்கள் இராசிக்கு இராகு பகவான், ஜீவனஸ்தானம் என்னும் 10-ஆம் இடத்திற்கும், கேது பகவான், சுகஸ்தானம் என்னும் 4-ஆம் இடத்திற்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்

       இராகு பகவான் இந்த பெயர்ச்சியில் என்ன செய்ய போகிறார்? என்று பார்த்தால், சூரியன் காலில் (சாரத்தில்) அமரும் இராகு, உத்தியோகம் தருவார். நீண்ட நாட்களாக வேலை தேடி வந்த உங்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் கொடுக்கும். பண வரவு உண்டாக்குவார். அதே சமயம், சூரியன் காலில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் செய்ய வைப்பார். பெற்றோருக்கு பொருளாதார சிக்கல், உடலநலனில் சிறு பிரச்னை போன்றவை தருவார். தாய் ஸ்தானத்திற்கு 7-இல், தந்தை ஸ்தானத்திற்கு 2-இல் இராகு இருப்பதால், அவர்களுக்கு சிறு பிரச்னை வரலாம். அவர்களின் ஜாதகம் பலமாக இருந்தால், பிரச்னைகள் தவிர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். பொன்,பொருள், ஆபரணம் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை. சிலருக்கு திருமண தடை நீங்கி திருமணம் இனிதே அமையும். புத்திர பாக்கியம் தடைப்பட்ட சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கேது தரும் பலன்

       உங்கள் இராசிக்கு கேது பகவான் என்ன செய்வார்? என்று பார்த்தால், குரு சாரத்தில் வருவதாலும், கேது சுகஸ்தானத்தில் இருப்பதாலும், உடல்நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை. அவரசம், பரபரப்பு கூடாது. ஒவ்வாத உணவால் உடலில் அலர்ஜி போன்றவை ஏற்படலாம். ஆகவே முக்கியமாக, உடலநலனில் கவனமாக இருங்கள். கேது, குருவின் சாரத்தில் இருப்பதால், திருமணமான பெண்களுக்கு கணவனால் பெரிய நன்மை உண்டு. பிரச்னைகள் வந்தாலும் தீர்ந்து விடும். எதையும் நிதானித்து செயல்பட்டால், கேது பகவான் வெற்றி பெற செய்வார். பொதுவாக இந்த இராகு-கேது பெயர்ச்சி, யோக பெயர்ச்சியே.

தனுசு இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு பாக்கியஸ்தானம் என்னும் 9-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், கீர்த்திஸ்தானம் என்னும் 3-ஆம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்

       சூரியன் காலில் (சாரத்தில்) வரும் இராகு பகவான், பாக்கியத்தில் உள்ளதால், பெற்றோரால் பொருளாதார நன்மைகள் ஏற்படும். இனி கை நிறைய காசுதான். வெளிநாடுகளுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் அமையும். தீராத பிணி தீரும். வழக்கு இருப்பின் வெற்றி ஏற்படும். பெரியவர்கள், தனவந்தர்களின் உதவி கிடைக்கும். சொத்து சுகம் தேடி வரும். வாடகை வீட்டில் தவித்தவர்கள், இனி சொந்த வீட்டில் அமர்களமாக இருப்பார்கள். இவை அத்துணையும் இராகுவால் கிடைக்கக் கூடிய நன்மைகளாகும். எதிரிகளும் இனி உதிரிகளாகி விடுவார்கள். பொதுவாக, பாக்கிய இராகு பல வழிகளில் லாபத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெற அருள் புரியும். பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் நல்லவை நிகழும். பல பிரச்னைகள் தீரும்.

கேது தரும் பலன்

       சரி, உங்கள் இராசிக்கு கேது பகவான் என்ன செய்யப் போகிறார்? என்றால், குரு சாரத்தில் கேது உள்ளார். மற்றவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும், “இவன் என்ன செய்து விட்டான்?என்று கூற வைத்து விடுவார். சில காரியங்களில் இராகு வெற்றியை கொடுத்தாலும், கேது சற்று தாமதப்படுத்துவார். கடன் பிரச்னையில் தேவையில்லா குழப்பத்தை, அதாவது குறிப்பாக, கணக்கு விஷயத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துவார். சகோதர பாவத்திற்கு சற்று மனக்குறை வைப்பார். சகோதரர்களின் ஜாதகம் யோகமாக இருந்தால் பிரச்னை வராது. சகோதரர்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டிய நிலை உண்டாகும். இந்த பெயர்ச்சியில் இராகு பெரிய நன்மை செய்வார், கேது, சிறுசிறு பிரச்னை உண்டாக்குவார். இந்த இராகு-கேது பெயர்ச்சி நன்மை செய்யும்.

மகர இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு அஷ்டமஸ்தானம் என்னும் 8-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், தனஸ்தானம் என்னும் 2-ஆம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்

       உங்கள் இராசிக்கு 8-ஆம் இடத்திற்கு வரும் இராகு தீமை செய்யுமா? என்று கவலை வேண்டாம். சூரியன் காலில் (சாரத்தில்) பெயர்ச்சி ஆவதால், முதலில் கடனை தீர்க்க வழி செய்வார். அலைந்து, திரிந்தாவது உங்கள் காரியத்தை முடித்து விடுவீர்கள். வழக்கு, பெரிய பிரச்னைகள் அத்தனையும் தீரும். ஆனால் உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பெற்றோருக்கு 12-ல் இராகு வந்திருப்பதால், அவர்களின் உடல்நலனிலும் கவனம் தேவை. தேவையில்லா பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளதீர்கள். போகட்டும் என்று விட்டு விடுங்கள். சொத்து விஷயத்தில் சிறு வில்லங்கம் வரலாம். கவனமாக தீர்க்க வழி தேடுங்கள். யாரையும் எளிதில் நம்பாதீர்கள். அஷ்டம இராகு, பகல் கனவு அதிகம் கொடுப்பார். சொந்த தொழில், உத்தியோக விஷயத்தில் நன்மை ஏற்படும்.

கேது தரும் பலன்

       சரி, உங்கள் இராசிக்கு தனஸ்தானத்திற்கு வந்திருக்கும் கேது என்ன செய்வார்? என்றால், வாக்கு வன்மை கொடுப்பார். வாக்கு பலிதம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், திருமணம் ஆனாவர்களுக்கு மனைவியால் () கணவனால் நன்மைகள் உண்டாகும். வீண் செலவுகளை நீங்களாக குறைத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு தனக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற மமதையை கேது உருவாக்கும் என்பதால், அந்த எண்ணத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அறவே அந்த எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். துடுக்குதனமான பேச்சால், விரோதங்கள், மனஸ்தாபங்கள் உருவாகும். பொதுவாக, இந்த இராகு-கேது பெயர்ச்சி அருமையாக இருக்கும்.

கும்ப இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு சப்தமஸ்தானம் என்னும் 7-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், உங்கள் இராசியிலேயே கேது, ஜென்ம கேதுவாகவும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்

       சப்தமஸ்தானத்தில் வரும் இராகு பகவான் என்ன கொடுக்கப் போகிறார்? எனப் பார்ப்போம். உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்தில் இராகு, சூரியன் காலில் (சாரத்தில்) வருவதால், நினைத்தது நடக்கும். நண்பர்களின் உதவி தேடி வரும். தடைப்பட்ட பல காரியம் தொடர்ந்து முடிவுக்கு வரும். கல்வி, உத்தியோகம், சொந்த தொழில் அத்தனையும் நன்மையாக அமையும். நீண்ட நாட்களாக தேடி வந்த வரன், வீட்டு கதவை தட்டும். சஞ்சலம் தீரும். சந்தோஷம் பிறக்கும். எதிர்பாரா தனப்பிராப்தி உண்டாக்கும். சில செலவுகளை மனைவிக்கு () கணவனுக்கு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். உடல்நலனுக்காக அவர்களுக்கு மருத்துவ செலவு இருக்கும். மகப்பேறுக்காவும் இருக்கலாம். இராகு பெயர்ச்சி பண வசதி தரும். இனி உட்கார்ந்த இடத்தில் காசுதான். பழையன கழித்து, புதியன புகுத்தல் நன்று என்பதற்கேற்ப, பழைய வாகனங்களை தள்ளிவிட்டு, புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

கேது தரும் பலன்

       சரி, உங்கள் இராசிக்கு ஜென்ம கேது என்ன செய்யப் போகிறார்? என்று பார்த்தால், சிந்தனை அதிகம் கொடுப்பார். இராகு உட்கார வைத்தாலும், கேது சிந்தனை அதிகம் கொடுப்பார். மற்றவர்களுக்கு உதவி செய்ய போவீர்கள். குடும்பத்தினருக்கும், மனைவி வழி உறவினர்களுக்கும் உதவிகள் அதிகம் செய்வீர்கள். கடன் தொல்லை தீர்க்க வழி வகுப்பீர்கள். வெளிநாட்டில் வேலை செய்யும் சிலர், சொந்த நாட்டுக்கு திரும்பலாம். கிடைக்கின்ற பணத்தை பிடித்து வையுங்கள். காரணம், ஜென்ம கேது அதிகம் செலவு வைப்பார். கூட்டு தொழிலில் உங்களின் உழைப்பே அதிகம் இருக்கும். பொதுவாக ஜென்ம கேது, செலவுகள் அதிகம் கொடுக்கக் கூடியதால் கணக்கு பார்த்து காலடி வைக்கவும். இந்த இராகு-கேது பெயர்ச்சி நன்மை தரும்.

மீன இராசி அன்பர்களேஉங்கள் இராசிக்கு சஷ்டமம் என்னும் 6-ஆம் இடத்திற்கு இராகு பகவானும், விரயஸ்தானம் என்னும் 12-ஆம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இராகு தரும் பலன்
       உங்கள் இராசிக்கு 6-ஆம் இடத்திற்கு வரும் இராகு, சூரியன் காலில் (சாரத்தில்) இருப்பதால், நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும் நேரம் இது. விரோதிகள், நோய் நொடிகள் அத்தனையும் காற்றில் தூசு பறந்து விடுவது போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த கவலைகள் கரைந்து விடும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். புத்திர ஸ்தானத்திற்கு 2-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், பிள்ளைகளுக்கு திருமணம் வெகு விமரிசையாக நடக்கும். தன-தான்யம், பொன், பொருள் அத்தனையும் இராகு வாரி கொடுப்பார். இதுநாள் வரையில் வீண் அலைச்சலால் அல்லாடி கொண்டிருந்த சிலர் நிம்மதியாக ஒரு இடத்தில் அமர்ந்து விடுவார்கள். ஆம், 6-இல் உள்ள இராகு அலைச்சலை தவிர்க்கும். உத்தியோக உயர்வு கொடுக்கும். வாக்கு வன்மை, தெய்வ அனுகிரகம் கிடைக்கும். இனி உங்களுக்கு இராகு பிரமாதமாக பலன் கொடுப்பார். எதிராளிகள் என்னதான் திட்டங்கள் போட்டாலும் உங்களை அசைக்க முடியாது. இராசிக்கு 6-ஆம் இடத்தில் உள்ள இராகு, எதிரிகளை பந்து போல் பறக்க வைப்பார். மறைமுக தொல்லைகள் தவிடு பொடியாகிவிடும். எதிலும் எப்போதும் வெற்றிதான்.

கேது தரும் பலன்

       சரி, உங்கள் இராசிக்கு கேது என்ன பலனை தருவார்? என்று பார்ப்போம். குருவின் சாரத்தில் அமைவதால், காரிய வெற்றி தருவார். தூற்றியவர்கள் போற்றுவார்கள். உங்கள் உதவியை எதிர்பார்த்து வருவார்கள். கோயில் திருப்பணிகளை அதிகம் செய்வீர்கள். பொதுவாக, மீன இராசிக்கு குரு நன்மை செய்வார் காரணம், அவர் உங்கள் இராசியாதிபதி. ஆகவே குருவின் சாரத்தில் வரும் கேது பெயர்ச்சி, உங்களை உச்சத்தில் வைக்கும். இந்த இராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 








© 2016www.bhakthiplanet.com All Rights Reserved