Tuesday, January 12, 2016

திருஷ்டி கழியும் போகி பண்டிகை | போகி பண்டிகை சிறப்பு கட்டுரை

Written by Niranjana

14.01.2016 அன்று போகி பண்டிகை
 
மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது

போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.

அன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் பிறந்து நம் வாழ்வில் நல்வழி பிறக்க,  மார்கழி நிறைவு பெறும் நாளில் வரும் போகி பண்டிகையன்று, இறைவனையும், நம் முன்னோர்களையும் வணங்கி, தை மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தமிழர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.!

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 








© 2016www.bhakthiplanet.com All Rights Reserved