Friday, June 26, 2020

Nakshatra Archanai | நட்சத்திர அர்ச்சனை

விஜய் ஜி கிருஷ்ணாராவ்

அனைவருக்கும் வணக்கம்.

சமீபத்தில் நான் ஒரு காணொளி பார்த்தேன்அது ஒரு ஆன்மிக சொற்பொழிவாளரின் காணொளிஅதில் அவர் பேசும்போது ஒரு கருத்தினைச் சொன்னார்அது என்னவென்றால்நாம் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகும் பொழுது யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு விளக்கம் தந்தார்.

கோவிலுக்குள் நாம் நுழைந்தவுடன் நாம் யார்நம்முடைய பெயர் என்னநம்முடைய நட்சத்திரம் என்னநம் குலம்கோத்திரம்நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியும்அதனால் நாம் அர்ச்சனை செய்யும் போது இறைவன் பெயருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டுமே தவிர நமது பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யக்கூடாது என்று அவர் சொல்லியிருந்தார்.


இது சரியான கருத்துதானா என்று பார்க்கும்போது அவருடைய கருத்தின்படி நாம் கோவிலுக்குள் நுழையும்போதே நம்மைப் பற்றிய எல்லா விபரமும் இறைவனுக்கு தெரியும்தான்.


வேண்டத்தக்கது அறியோய் நீ

என திருவாசகம் சொல்கிறது.

அதனாலகோயிலில் நாம் அர்ச்சனை செய்யும் பொழுதுநம்முடைய நட்சத்திரம்கோத்திரம் போன்றவை தெரியவில்லை என்றால் நாம் ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்வதில் ஒன்றும் தவறில்லைஆனால் நம்முடைய நட்சத்திரம் இதுதான் என்று தெளிவாக தெரிந்த பிறகு இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வதை விட நமது பெயருக்குதான்நம்முடைய நட்சத்திரத்திற்குதான் அர்ச்சனை செய்ய வேண்டும்.

காரணம் –

நாம் ஒரு நட்சத்திரத்தை சார்ந்து பிறந்திருக்கிறோம்இறைவன் மீது நமக்கு மிகுந்த பக்தி இருக்கின்றதுஅதனால் கோவிலுக்கு செல்கின்றோம்நாம் பிறந்த நட்சத்திரத்தின் மீது நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம்தான் கோவிலில் அர்ச்சனை செய்யும் முறை.

நமது நட்சத்திரம்

இறைவனுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியும்நாம் யார்நம்முடைய கஷ்டங்கள் என்னஇப்படி எல்லாம் தெரிந்திருந்தாலும் கூடஒரு நட்சத்திரத்தின் சாராம்சமாக நாம் பிறந்திருக்கிறோம்ஒரு நட்சத்திரத்தின் குணாதிசயங்களுடன் நாம் பிறந்திருக்கிறோம்அந்த நட்சத்திரத்தின் தாக்கம் நம்மீது எப்போதும் நம் இறுதி மூச்சு உள்ளவரை இருந்துகொண்டேதான் இருக்கும்அதனால் நம்முடைய நட்சத்திரத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகநாம் அந்த நட்சத்திரத்தை போற்றிப் புகழ்ந்து வணங்கும் விதமாககோவிலில் நாம் பிறந்த நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்வதில் எந்த தவறும் இல்லைநாம் பிறந்த நட்சத்திரம் எது என்று தெரிந்த பிறகு நம் நட்சத்தித்தின் பெயரை சொல்லிதான் ஆக வேண்டும் என்பதே உண்மை.

அப்படி நாம் நமது பெயருக்கு அர்ச்சனை செய்யும்போதுஏதோ நாம் பெருமையாகச் சொல்கிறோம் என்று அர்த்தம் அல்லநமது நட்சத்திரத்தை போற்றுகிறோம்அந்த நட்சத்திரத்தின் பலனாக மேலும் நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்அதனால் அந்த நட்சத்திர தேவதை நமக்கு மேலும் பல நன்மைகளை தருகிறது – தரும்அந்த நட்சத்திரத்தால் வரக்கூடிய தோஷங்களும் தடுக்கப்படுகிறது என்பதும் உண்மை.

பிறந்த நட்சத்திரம் தெரியாதா?

சிலருக்கு தங்களின் பிறந்த நட்சத்திரம் தெரியாமல் இருக்கலாம்அப்படி நட்சத்திரம் தெரியாமல் இருந்தாலும் கவலை இல்லைஉங்கள் பெயரின் முதல் எழுத்து உங்களை வழிநடத்தும் நட்சத்திரமாகவும் அமையும்அதனால் ஜாதகப்படி பிறந்த நட்சத்திரம் தெரியாதவர்கள் தங்களின் பெயரின் முதல் எழுத்து எந்த நட்சத்திரத்தை குறிக்கின்றது என்பதை தெரிந்துகொண்டுஅந்த நட்சத்திரத்தை வணங்குவது மிகவும் உன்னத பலனை தரும்.

கோத்திரம்

நாம் பிறந்த கோத்திரம் எது என்று தெரிந்திருந்தால் அந்த கோத்திரத்தை சொல்லியும் அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம் காரணம்நமது வம்சத்தின் முதல் தோன்றலாக அல்லது பிறப்பாக ஒரு முனிவர் அல்லது ஒரு சித்தர் அல்லது ஒரு மகானின் வழித்தோன்றலாகதான் நாம் ஒவ்வொருவரும் பிறந்திருக்கிறோம்அவ்வாறு நமது வம்சத்தின் போற்றத்தக்க பிறப்பாக இருக்கக்கூடிய அந்த ஆன்மாவின் பெயரிலேயேதான் நமது கோத்திரமும் அமைந்திருக்கிறது.

அந்த ஆன்மா சிவனை வழிபட்ட ஆன்மாவாக இருந்தால் அந்த பெயரோடு கோத்திரமும்ஸ்ரீமன் நாராயணனை வணங்கிய ஆன்மாவாக இருந்தால் அந்த ஆன்மாவின் பெயரிலோ அல்லது ஏதேனும் கிராம தெய்வத்தின் பெயரிலோ நமது வம்சத்தின் போற்றுதலுக்குரிய ஒரு புனித ஆத்மா தோன்றியிருக்கும்அந்தப் பெயரிலேயே நாம் நமது குல-கோத்திரத்தை சொல்லி வருகிறோம்.

உங்களுக்கு உங்கள் கோத்திரத்தின் பெயர் தெரிந்திருந்தால் அந்த கோத்திரத்தின் பெயரையும் அர்ச்சனையின்போது சொல்வது மிகவும் நல்லதுகாரணம் நமது முன்னோர்களின் – குலதெய்வத்தின் ஆசி நமக்கு இதன் மூலமாகவும் பரிபூரணமாக கிடைக்கும்.

அதனால் நாம் கோவிலுக்கு செல்லும்போதுநமக்கு நமது நட்சத்திரம் எது என்று தெரிந்திருந்தால்கண்டிப்பாக உங்கள் நட்சத்திரத்தின் பெயரிலேயே அர்ச்சனை செய்யுங்கள்உங்கள் பெயர் – நட்சத்திரம் – கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்அதுதான் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக இறைவனருளால் அமையும்.

நமது வீட்டின் பூஜை அறையில் தினந்தோறும் இறைவனை வணங்கும்போது கூட நமது நட்சத்திரத்தைபிறந்த  குலகோத்திரத்தை நினைத்து வணங்கிநாம் பிறந்த நட்சத்திரத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்று  தினமும் வேண்டிக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நன்றி வணக்கம்.


Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.


As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 



BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

Vijay G Krishnarau
vastu specialist
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved