Friday, December 26, 2014

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை!



Written by Niranjana

ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார்.

வீப்ரதாசௌக்கியமா”?

தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.?

இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.” (பின்னே இருக்காதா. அந்த ஸ்ரீமன் நாராயணனே வந்து பேசுகிறார் என்றால் உண்மையிலேயே வீப்ரதன் புண்ணியம் செய்துதானே இருக்க வேண்டும்)

சரி அது போகட்டும். உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்குமேலும் படிக்க