Friday, July 8, 2016

குழந்தைகளை தாக்கும் தோஷம்




Written By Niranjana

ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா?

ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது. அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும்இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved