Friday, July 8, 2016

கண்திருஷ்டியை நீக்கும் கோமாதா




Written By Niranjana

வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டுஎன்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில்  இருக்கிறது.

வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது.

அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved