Sunday, November 27, 2016

பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்



Written by NIRANJANA

பேடுல் ஜில்லாவை சேர்ந்த டெண்டுல்கர் என்பவர் ஷீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் பல தடவை ஷீரடிக்கு பயணம் செய்ய நினைக்கும் போதேல்லாம் ஏதாவது ஒரு வேலை வந்து தடை உண்டாகும். “ஷீரடிக்கு செல்ல முடியாமல் நம்மை ஏதோ ஒரு சக்தி தடுக்கிறது. அது தீய சக்தியாகதான் இருக்கும். நமக்கு நன்மை ஏற்பாடாமல் தடுக்கிறதே.” என்று மனம் வருந்தினார் டெண்டுல்கர். ஒருநாள் அவர் கனவில், “நீ அன்னதானம் செய். உன் பாவம் விலகும். அதன் பிறகு நீ என்னை காண எந்த தடையும் வராதுஎன்றார் சாய்பாபா.

தன்னுடைய கனவை மறுநாள் நிறைவேற்ற முடிவு செய்தார் டெண்டுல்கர். தன்னிடம் போதிய வசதி இருக்கும் போது மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வார். பணம் இல்லாத சமயத்தில் எறும்புகளுக்கு வெல்லம் அல்லது அரிசி மாவு போடுவார். இப்படி பலமுறை செய்து வந்தார் டெண்டுல்கர். ஒருநாள் டெண்டுல்கரின் நண்பர் ஒருவர், “நான் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசிக்க போகிறேன். நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும்என்றார். இதை கேட்ட டெண்டுல்கர் மகிழ்ச்சியடைந்து உடனே அந்த நண்பருடன் கிளம்பினார் சீரடிக்கு. சீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை கண்டதும் டெண்டுல்கரால் ஆனந்தத்தை அடக்க முடியாமல் மகிழ்ச்சியில்பாபா…” என்று ஆனந்த கண்ணீருடன் கத்தினார்.

உன் பாவவினை நீங்கியதால் ஆனந்தம் அடைந்தாயா டெண்டுல்கர். நீ செய்த அன்னதானத்தின் மகத்துவத்தால்தான் என்னை நீ சந்திக்க முடிந்ததுஎன்று காந்த குரலில் சாய்பாபா பேசியதை கேட்டதும், இன்னும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார் டெண்டுல்கர்.  உடன் இருந்தவர்,

பாபாதங்களுக்கு டெண்டுல்கரை முன்பே தெரியுமா?” என்றார்.

சாய்பாபா புன்னகைத்தார்.

உலகத்தில் இருக்கும் ஜீவராசிகளை பற்றி பாபாவுக்கு தெரியாமலா இருக்கும்என்றார் பாபாவின் பக்கத்தில் இருந்த பக்தர்களின் ஒருவர்.

பாபா நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும். என் கையால் உணவை உங்களுக்கு நான் பரிமார வேண்டும். அப்போதுதான் என் மனம் நிம்மதியடையும். அத்துடன் உங்கள் பாதம் என் வீட்டில்பட்டால் எங்கள் வம்சமே மேன்மை அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறதுஎன்றார் டெண்டுல்கர்.

நிச்சயமாக ஒருநாள் உன் வீட்டுக்கு வருகிறேன் கவலைப்படாதே. ஆனால் தொடர்ந்து நீ அன்னதானம் செய்வதை மட்டும் நிறுத்தி விடாதே. நான் எப்போது வேண்டுமாலும் எந்த உருவத்திலும் உன் வீடு தேடி வருவேன். உன்னிடத்தில் உணவு கேட்பேன்.” என்றார் டெண்டுல்கரிடம் சாய்பாபா.

சாய்பாபாவை தரிசித்துவிட்டு தன் சொந்த ஊருக்கு திரும்பினார்கள் டெண்டுல்கரும அவருடைய நண்பரும். சில மாதங்கள் கழித்து ஒருநாள், பிச்சை கேட்டபடி ஒரு சாது வந்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக டெண்டுல்கர் வீட்டின் முன் நின்று,

தம்பிஎனக்கு பசியாக இருக்கிறது. உணவு வேண்டும்.” என்றார்.

இது இரவு நேரம் என்பதால் எல்லா உணவும் காலியாகிவிட்டது. சற்று முன் வந்திருந்தால் நிச்சயம் உணவு தந்திருப்பேன். இருந்தாலும் பசி என்று கூறுகிறீர்கள். சற்று பொறுங்கள். என் நண்பர்களின் வீட்டில் உணவு இருந்தால் வாங்கி வருகிறேன்.” என்று கூறி விட்டு, டெண்டுல்கர் தன் நண்பர் வீட்டிற்கு சென்று உணவு வாங்கி வந்தார். இதை கண்ட சாது மகிழ்ச்சியடைந்தார்.

எதற்காக இத்தனை சிரமம் எடுக்கிறாய். உணவு இல்லாத போது வீட்டில் எந்த நேரமும் இருக்கும் வெல்லத்தை கொடுத்தாலே போதும். டெண்டுல்கர் நீ நன்றாக தெரிந்து கொள். முடிந்த அளவு உணவு தானம் செய்வதை மட்டும் விட்டு விடாதே. உன் கைகளால் தரும் உணவு தானத்தால் உன் தலையெழுத்து நன்றாக அமையும். கர்ணன், பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம் செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே. ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும் பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே பசி கொடுமை வராதுஎன்றார் மகான் சாய்பாபா.

என் பெயரையும் இத்தனை நல்ல உபதேசமும் செய்யும் தாங்கள் சாதாரண பிச்சைகாரனாக இருக்க முடியாது. சொல்லுங்கள் அய்யா தாங்கள் யார்.?” என்றார் டெண்டுல்கர்.

நான் யாராஎன்னை தெரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய் டென்டுல்கர். நான் சொன்னதை மட்டும் கேள். அது போதும் இந்த பிச்சைகாரனுக்கு.” என்று சிரித்து கொண்டே விடைப்பெற்றார். விடைபெற்றார் என்பதை விட அந்த நிமிடமே மாயமாக மறைந்தார். தன் வீட்டிற்கு நேரடியாக வந்தது மகான் ஷீரடி சாய்பாபா என்பதை அப்போதுதான் உணர்ந்தார் டெண்டுல்கர்.