Monday, July 20, 2015

வேண்டுதல் நிறைவேற்றும் ஆடித் தபசு திருநாள்! சிறப்பு கட்டுரை




Written by Niranjana

30.7.2015 அன்று  ஆடித் தபசு

தவம் என்றால் என்ன? நம் மனதில் என்ன விரும்புகிறோமோ அதனை அடையும்வரை காரியத்தில் கண்ணாக இருப்பதுதான் தவம்.  

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும்.

மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும்.

என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும்.

மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

தபஸ் செய்யும் அம்பாளை தரிசித்தால் முயற்சி திருவினையாகும்

அம்பாள், தனக்கு நேர்ந்த சாபம் நீங்கி சிவபெருமானுடன் மீண்டும்  சேர மாங்காட்டில் ஊசி முனையில் தவம் இருந்து சிவபெருமானுடன் சேர்ந்து தன் தவத்தினால் சாதித்துவிட்டார். அதனால், சாதனை செய்ய வேண்டும், புகழ் பெற வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசித்தால் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள்.   மேலும், திருமண பாக்கியம் அமையவும், பிரிந்த கணவன்மனைவி சேருவதற்கும் துணை செய்வாள் அன்னை.

அதுபோல,  திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில்…மேலும் படிக்க