Thursday, March 6, 2014

கல்யாண ஆஞ்சனேயரை வணங்கினால் திருமண தடை விலகும்!



Written by Niranjhana

அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.

மழை நீரானது சுவாதி நட்சத்திர வேளையில் கடலில் இருக்கும் சிப்பிக்குள் விழுந்து முத்தாக கிடைக்கிறது என்கிறது நட்சத்திர சாஸ்திரம்.