Saturday, October 20, 2018

ஜோதிடம் - மனநிம்மதி இல்லாதவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ஆம் –

நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, கேது, இராகு ஆகிய இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று 4-ம் இடத்தில் இருந்தால் அவர்கள் குழப்பவாதிகளே, சந்தேகப் பிரானிகளே. ஒருவேலை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று சதா நிம்மதி இல்லாமல் குழம்பிக்கொண்டு இருப்பார்கள்.

4-ம் இடத்தில் இந்த பாபகிரகங்கள் நல்ல சாரத்தில் இருந்தால் பயமில்லை, பாதகமுமில்லை. ஆனால் பகை சாரத்திலோ, 6,8,12-க்குரிய சாரத்திலோ இருந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க குழப்பம் கோவிந்தசாமிதான்.

சரி- இதற்கு தீர்வு என்ன?

யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம். ஆம், ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கேற்ற மந்திரம் ஜபிக்க வேண்டும். அதைபோலவே நம்முடைய பிறந்த தேதிக்கு ஏற்ப நம் பெயர் மந்திரம் அதாவது நல்ல ஆதிக்கத்தில் பெயர் எண் இருந்துவிட்டால் மனக்குழப்பம், தேவையில்லா சந்தேகம் தீரும். மன அமைதி முழுமையாக பெறாவிட்டாலும் நல்ல சிந்தனை, திட நம்பிக்கை உருவாகும். வாழ்க வளமுடன்!.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

ஜோதிடம் - எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற வேண்டுமா?

உங்கள் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 இப்படி வரும் நட்சத்திர நாட்களில் அதாவது உங்கள் நட்சத்திரம் பூசம் என்றால், பூச நட்சத்திரத்திற்கு 2-வது நட்சத்திரம் ஆயில்யம், 4-ம் நட்சத்திரம் பூரம், 6-வது நட்சத்திரம் அஸ்தம் இப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு வரம் இரட்டைபடை நட்சத்திரத்தில் எந்த விஷயத்தை ஆரம்பம் செய்தாலும் வெற்றி நிச்சயம்.

சிலருக்கு ஒரு சந்தேகம், ஆயில்யம் நல்ல நட்சத்திரமா?

அந்த நட்சத்திர தினத்தில் நவகிரக பரிகாரம், தோஷ பரிகாரம், கங்கையில் நீராடுவது, பித்ரு தோஷம் விலக புண்ணிய ஸ்தலங்களில் நீராடுவது போன்றவற்றை செய்வது மிக,மிக விசேஷமானது. ஆகவே நீங்கள் எதை செய்தாலும் இப்படி இரட்டை நட்சத்திரத்தில் செய்ய பழகுங்கள். வெற்றி உங்களை தேடி வரும். வாழ்க வளமுடன்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Friday, October 19, 2018

கண் திருஷ்டியை நீக்கும் குதிரை லாடம்


Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, October 11, 2018

Guru Peyarchi Palangal 2018-2019

Mesha Rasi - Aries - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=d4haw0nBmh4 Reshaba Rasi – Taurus - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=MYIn39KF0eQ Methuna Rasi – Gemini - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=tGWXEy8M7qg Kataka Rasi – Cance - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=r4t6PZ0_EjQ Simma Rasi – Leo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=QDgPl1bSc9I Kanni Rasi – Virgo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=n73CLiy55pk Thula Rasi – Libra - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=K6eGe_kKb2I Virchika Rasi – Scorpio - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Xnbo63fIquA Dhanusu Rasi – Sagittarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=wytToYi9yeM Magara Rasi – Capricorn - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=JpqM-iOXO5I Kumba Rasi – Aquarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Yth9rOolbxI Meena Rasi – Pisces - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=kl9kHzvSzW0 For Astrology Consultation Sri Durga Devi upasakar, Krishnarau. V.G Phone Number: 98411 64648 E – Mail: bhakthiplanet@gmail.com Visit: www.bhakthiplanet.com

Friday, September 28, 2018

விளக்கு வைக்கும் போது இதை செய்யாதிங்க


Written by NIRANJANA

வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? தெரியுமா.

மின் விளக்கு வருவதற்கு முன்பே அக்னி பகவானின் அருளால் தீப வெளிச்சம் உண்டானது. பஞ்சபூதங்களில் அக்னிக்கே அதிக பலம் என்கிறது சாஸ்திரம். தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே எரியும். எக்காரணத்திலும் நெருப்பு கீழ் நோக்கி எரியாது. யாருக்கும் தலை வணங்காது. இப்படி சக்தி வாய்ந்த நெருப்பை வீட்டில் இறைவன் முன்பாக தீபமாக காலை,மாலையிலும் ஏற்றி வைத்தால் அந்த வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்தியை தீப ஒளி பொசிக்கி வைக்கும். போசிக்கி வைத்ததை தலையில் தேய்த்துக்கொண்டால் உயர்ந்த அந்தஸ்தை தராது. அதனால் தீபத்தின் திரியை சரி செய்த பிறகு கையில் இருக்கும் எண்ணை பிசுக்கை வேறு ஒரு துணியால் சுத்தமாக துடைத்துக் கொள்ளவேண்டும். கோயிலில் விளக்கு ஏற்றும் போதும் இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்தில்….

ஸ்ரீராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ரீஆஞ்சேனயர் வந்து நிற்பார். அதுபோல் வீட்டில் குறிப்பாக மாலையில் விளக்கு வைத்த நேரத்தில் அபசகுணமாக பேசுவதையோ, வீட்டை பெருக்குவதையோ, குப்பையை வெளியில் கொட்டுவதையோ தவிர்த்தால் அந்த வீட்டில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்வாள். மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான தெய்வீக பாடல்களையும் ஒலிக்கச் செய்யலாம். இப்படி நல்லமுறையில் சாஸ்திரத்தை கடைபிடித்தால் இன்னல்கள் மறையும் நன்மைகள் ஏற்படும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Sunday, August 26, 2018

J.Swaminathan Kadhu kuthu function - Son of Niranjana | காது குத்துதல் விழா


23.08.2018  அன்று என் மகன் ஜெ.சுவாமிநாதனுக்கு வடபழனி முருகன் கோவிலில் காது குத்துதல் விழா இனிதே நடந்தது

Saturday, August 11, 2018

காஞ்சி மகாபெரியவர் தரிசிக்க விரும்பியது…


Written by Niranjana

காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். அப்போது ஒருநாள் மாலையில் தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும்  குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்என்றார்.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.

மகாபெரியவர், குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்.. இதை கேட்ட சீடர்கள், மகாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள்.

குஞ்சிதபாதத்தை தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும் என்று நினைத்து மகாபெரியவர் அப்படி சொல்லவில்லை. மோட்சம் கிட்ட வேண்டும் என்றுதான் மகான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக இருப்பாரா?  உடனே தன் பிள்ளை விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா.

ஆம், அப்படிதான் நடந்தது. மறுநாள் சூரியனை விட வேகமாக செயலில் இறங்கினான் இறைவன். மகாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு சேவை செய்யும் சில தீட்சிதர்கள்.

நாங்கள் பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டுவந்து இருக்கிறோம்.” என்ற கூறி பெரியவரை தரிசிக்க அனுமதி கேட்டார்கள் இதை கேட்ட மகாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம் மகாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார். இன்று அதிகாலையிலேயே மகாபெரியவரை தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமான் அனுப்பி இருக்கிறாரே.” என்று மெய்சிலிர்த்து போனார்கள்.

மகாபெரியவரிடம் தீட்சிதர்கள்பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில் வைத்துக்கொண்டார் மகாபெரியவர்.

மகான்கள் முக்தி கிடைக்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார்.

நாம் சராசரி மனிதர்கள் அல்லவா. நல்ல உடல்நலத்திற்குதான் அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல்நலமாக இருந்தால் எல்லா பொருள் நலமும் தேடி வரும். சகலமும் நலமாக அமையும். ஆகவே நாமும் ஒருமுறையாவது சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால் தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். நலமோடும் வளமோடும் வாழ்வோம்.

ஓம் நமசிவாய” 
 தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.” 
 திருசிற்றம்பலம் !
Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved