Friday, October 19, 2018

கண் திருஷ்டியை நீக்கும் குதிரை லாடம்


Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, October 11, 2018

Guru Peyarchi Palangal 2018-2019

Mesha Rasi - Aries - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=d4haw0nBmh4 Reshaba Rasi – Taurus - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=MYIn39KF0eQ Methuna Rasi – Gemini - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=tGWXEy8M7qg Kataka Rasi – Cance - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=r4t6PZ0_EjQ Simma Rasi – Leo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=QDgPl1bSc9I Kanni Rasi – Virgo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=n73CLiy55pk Thula Rasi – Libra - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=K6eGe_kKb2I Virchika Rasi – Scorpio - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Xnbo63fIquA Dhanusu Rasi – Sagittarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=wytToYi9yeM Magara Rasi – Capricorn - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=JpqM-iOXO5I Kumba Rasi – Aquarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Yth9rOolbxI Meena Rasi – Pisces - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=kl9kHzvSzW0 For Astrology Consultation Sri Durga Devi upasakar, Krishnarau. V.G Phone Number: 98411 64648 E – Mail: bhakthiplanet@gmail.com Visit: www.bhakthiplanet.com

Friday, September 28, 2018

விளக்கு வைக்கும் போது இதை செய்யாதிங்க


Written by NIRANJANA

வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? தெரியுமா.

மின் விளக்கு வருவதற்கு முன்பே அக்னி பகவானின் அருளால் தீப வெளிச்சம் உண்டானது. பஞ்சபூதங்களில் அக்னிக்கே அதிக பலம் என்கிறது சாஸ்திரம். தீபத்தின் நெருப்பு மேல் நோக்கியே எரியும். எக்காரணத்திலும் நெருப்பு கீழ் நோக்கி எரியாது. யாருக்கும் தலை வணங்காது. இப்படி சக்தி வாய்ந்த நெருப்பை வீட்டில் இறைவன் முன்பாக தீபமாக காலை,மாலையிலும் ஏற்றி வைத்தால் அந்த வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்தியை தீப ஒளி பொசிக்கி வைக்கும். போசிக்கி வைத்ததை தலையில் தேய்த்துக்கொண்டால் உயர்ந்த அந்தஸ்தை தராது. அதனால் தீபத்தின் திரியை சரி செய்த பிறகு கையில் இருக்கும் எண்ணை பிசுக்கை வேறு ஒரு துணியால் சுத்தமாக துடைத்துக் கொள்ளவேண்டும். கோயிலில் விளக்கு ஏற்றும் போதும் இந்த விஷயத்தை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்தில்….

ஸ்ரீராமபிரானின் நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அந்த இடத்தில் ஸ்ரீஆஞ்சேனயர் வந்து நிற்பார். அதுபோல் வீட்டில் குறிப்பாக மாலையில் விளக்கு வைத்த நேரத்தில் அபசகுணமாக பேசுவதையோ, வீட்டை பெருக்குவதையோ, குப்பையை வெளியில் கொட்டுவதையோ தவிர்த்தால் அந்த வீட்டில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்வாள். மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான தெய்வீக பாடல்களையும் ஒலிக்கச் செய்யலாம். இப்படி நல்லமுறையில் சாஸ்திரத்தை கடைபிடித்தால் இன்னல்கள் மறையும் நன்மைகள் ஏற்படும்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Sunday, August 26, 2018

J.Swaminathan Kadhu kuthu function - Son of Niranjana | காது குத்துதல் விழா


23.08.2018  அன்று என் மகன் ஜெ.சுவாமிநாதனுக்கு வடபழனி முருகன் கோவிலில் காது குத்துதல் விழா இனிதே நடந்தது

Saturday, August 11, 2018

காஞ்சி மகாபெரியவர் தரிசிக்க விரும்பியது…


Written by Niranjana

காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல் இருந்தார். அப்போது ஒருநாள் மாலையில் தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும்  குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்என்றார்.

சிதம்பரத்தில் நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும் நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.

மகாபெரியவர், குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்.. இதை கேட்ட சீடர்கள், மகாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள்.

குஞ்சிதபாதத்தை தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும் என்று நினைத்து மகாபெரியவர் அப்படி சொல்லவில்லை. மோட்சம் கிட்ட வேண்டும் என்றுதான் மகான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக இருப்பாரா?  உடனே தன் பிள்ளை விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா.

ஆம், அப்படிதான் நடந்தது. மறுநாள் சூரியனை விட வேகமாக செயலில் இறங்கினான் இறைவன். மகாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு சேவை செய்யும் சில தீட்சிதர்கள்.

நாங்கள் பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டுவந்து இருக்கிறோம்.” என்ற கூறி பெரியவரை தரிசிக்க அனுமதி கேட்டார்கள் இதை கேட்ட மகாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம் மகாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார். இன்று அதிகாலையிலேயே மகாபெரியவரை தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமான் அனுப்பி இருக்கிறாரே.” என்று மெய்சிலிர்த்து போனார்கள்.

மகாபெரியவரிடம் தீட்சிதர்கள்பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில் வைத்துக்கொண்டார் மகாபெரியவர்.

மகான்கள் முக்தி கிடைக்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார்.

நாம் சராசரி மனிதர்கள் அல்லவா. நல்ல உடல்நலத்திற்குதான் அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல்நலமாக இருந்தால் எல்லா பொருள் நலமும் தேடி வரும். சகலமும் நலமாக அமையும். ஆகவே நாமும் ஒருமுறையாவது சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால் தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். நலமோடும் வளமோடும் வாழ்வோம்.

ஓம் நமசிவாய” 
 தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.” 
 திருசிற்றம்பலம் !
Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Sunday, July 8, 2018

அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும்


Written by NIRANJANA
காரணம் இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதை அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் சமைத்து படைப்பார்கள். கூழ் அம்மனுக்கு பிடிக்கும்.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.


சரி கூழ் எதற்காக படைக்கிறார்கள்? என்ற காரணத்தையும் அறிய வேண்டுமல்லவா.

ஆடி மாதம் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள். அதாவது தீ மிதிப்பார்கள். அப்போது தீ மிதிக்கும் பக்தர்களின் உடலில் அம்மன் இறங்குவார். அந்த பக்தனின் உருவத்தில் அம்மனே தீ மிதிப்பார். இதனால்தான் பல அடி தூரம் கொண்ட தீயில் பக்தர்கள் நடக்கும்போது அவர்களின் பாதத்திற்கு எந்த தீ கொப்பளங்களும் ஏற்படுவதில்லை.

ஆடி மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால் அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும். அதை தணிக்கவே குளிர்ச்சியான தன்மைகொண்ட கேழ்வரகை அரைத்து, அத்துடன் நொய் அரிசியை கலந்து கூழ் தயாரித்து அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உருவானது.

இப்போது தெரிந்துக்கொண்ட்டீர்களா ஆடி மாதம் அம்மனுக்கு ஏன் கூழ் வைக்கிறார்கள் என்று.

தன் பக்தர்கள்  ஏழ்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தினமும் சாப்பிடும் கூழை தனக்கு பிடித்த உணவாக மாற்றிக்கொண்டாள் அன்னை.  அம்மனுக்கு கூழ் படைத்தால் அந்த பக்தர்களில் வாழ்க்கை வசந்தமாக மாறும்!

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, July 5, 2018

பள்ளத்தில் இருப்பவர்களை பல்லாக்கில் உட்கார வைக்கும் இராகு-கேது


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவருடைய ஜாதகத்தில் இராகுகேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம்.

தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள்.

கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களேகேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.”  என்கிறார் கேது பகவான்.

அது எப்படி என பார்ப்போம்.

பாம்பை பிடித்து யோகத்தை சொல்லு.

சனியை பிடித்து மாரகத்தை சொல்லு.
என்பது ஜோதிட பொன்மொழி.

ஒருவரின் ஜாதகம் பணக்கார ஜாதகமா? கோடீஸ்வர ஜாதகமா? என்பதை தெரிந்துக்கொள்ள, ஜாதகத்தில் இராகுகேதுவின் நிலையை கணித்து பார்க்க வேண்டும். இராகுகேது அமர்ந்த இடத்தின் அதிபதி, லக்கினத்திற்கு 2,4,5,9,10,11-ல் இருந்தாலும், அதனை குரு பார்த்தாலும் செல்வத்தை வாரி வழங்குகிறார். அதேபோல இராகுவும் செய்கிறார்.

உதாரணமாக, ஒருவருக்கு ரிஷப லக்கினமாக அமைந்து, கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியன் புதன்.

இந்த புதன், மகரத்தில் அதாவது 9-ல் குருவோடு சேர்ந்திருந்தாலும், குரு பார்த்தாலும் அவன் செல்வந்தன். அதுபோல, கடக லக்கினமாக இருந்து, 8-ல் கேது, அந்த வீட்டுக்குரியவன் சனி உச்சம் பெற்று துலாவில் இருந்தாலும் அவர்கள் செல்வந்தர்களே. அதுபோல, சிம்ம லக்கினமாக இருந்து கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியவன் புதன், 5-ல் இருந்தாலும் தனவான்களே.

அதேபோல், குருகேது சேர்க்கை, குரு -இராகு சேர்க்கை ஆகிய இந்த கூட்டணி கிரகங்களும் அந்த ஜாதகரை செல்வந்தனாக்குகிறது.

என் அனுபவ ஆராய்ச்சியில், இராகு 1,4,7,10-ல் இருந்து திசை நடைபெற்றால், யோகத்தையே செய்கிறது. பள்ளத்தில் இருப்பவனை பல்லாக்கில் உட்கார வைக்கிறது. பொதுவாக கேது, கெடுப்பான்  கெடுப்பான் என்று கூறி அலறுவதை விட, கேது, கொடுப்பான் கொடுப்பான் என்று கூறுவதே சரியாகும்.

அதாவது, இராகுவோ கேதுவோ அமர்ந்த இடத்தின் அதிபதி, ஆட்சிஉச்சம் பெற்றாலும், 2,4,5,7,10,11-ல் இருந்தாலும் யோகமே செய்யும்.

Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel


For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved