Thursday, March 30, 2017

Numerology For Your Upliftment



Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

ஏற்றம் தரும் எண்கணிதம்



Written by
Sri Durga Devi upasakar,
Krishnarau.V.G

ஜாதகம் சாதகமாக இருந்தால் யோகம். ஆனால் பாதகமாக இருந்தால் மறுபடியும்  நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். ஸ்ரீமந் நாராயணன் ஒருவர்தான். ஆனால் அவர் பல அவதாரங்கள் எடுக்கும்போது அவருடைய பெயர்கள் மாறுவதை போல் அவரின் வாழ்க்கை முறையும் மாறியது.

உதாரணத்துக்கு ஸ்ரீ ராமசந்திரர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர் இப்படி பெயர் மாறும் போது வாழ்க்கையின் சூழ்நிலையும் மாறி விடுகிறது. ஆனால் ஒரே எழுத்து அதுவும் முதல் எழுத்து ரா அதாவது ராமன் என்ற எழுத்தும் ரங்கநாதர் என்ற எழுத்தும் ராவில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் ஸ்ரீ ரங்கநாதராக இருந்த நிம்மதி ராமராக இருக்கும்போது இல்லை.

இதில் இருந்து நாம் அறிய வேண்டியது எழுத்தை விட பெயருக்கு அதிக சக்தியிருக்கிறது. அந்த பெயர் எண்கணித முறைப்படி அமைந்தால் யோகம்.

சிவாஜி ராவ்என்றிருந்த வரை கிடைக்காத புகழும் வாய்ப்பும் வசதியும்ரஜினிகாந்த்என்று பெயர் மாற்றிய பிறகு கிடைத்தது.

கணேசன்என்றிருந்த வரை கிடைக்காத புகழ்சிவாஜி கணேசன்ஆன உடன் கிடைத்தது.

சிவாஜிஎன்ற பெயர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமலும் இன்னொருவருக்கு மிக அதிர்ஷ்டத்தையும் தந்தது. இதனால் நம் பெயரையே இவர்களை போல எல்லோரும் மாற்ற வேண்டும் என்றில்லை. அவரவர்களின் பெயர்களுக்கேற்ப எண்கணித முறைப்படி எழுத்துகளை மட்டும் மாற்றி அமைத்து நல்ல முன்னேற்றத்தை பெற முடியும்.
பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது. அப்படியே மாற்றினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்காது. ஆனால் பெயரையோ அல்லது பெயருக்கு உண்டான நம்பரையோ எண்கணித முறைப்படி மாற்றினால் ஏற்றமான வாழ்க்கையை பெறலாம்.
2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய -மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved

Friday, March 24, 2017

அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி! சிறப்பு கட்டுரை




Written by Niranjana 




05.04.2017    அன்று ஸ்ரீராம நவமி!
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம்.


நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான்.

தந்தை சொல் மீறாதவர். ஏற்ற-தாழ்வு பார்க்காமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் படைத்தவர். தன்னை நம்பி விரோதியே வந்தாலும் அவர்களை பழி வாங்காமல் அடைக்கலம் தரும் உத்தம குணம் கொண்டவர். இன்னும் இன்னும் எத்தனையோ சிறப்புகள் நிறைந்த ஸ்ரீஇராமபிரானின் சரித்திரத்தை படித்தாலே தீராத கஷ்டங்கள் தீரும்.

ஸ்ரீஇராமருக்கு பட்டாபிஷேகம் முடிந்த பிறகு ஸ்ரீஇராமரிடம் சீதை பேசி கொண்டிருந்தபோது,  “உங்கள் வாழ்வின் சம்பவங்களை கேட்பது மகிமை வாய்ந்ததுஎன்றார்.

அதற்கு ஸ்ரீஇராமர், “எப்படி சொல்கிறாய்.?” என கேட்டார்.

அதற்கு சீதை, “இராவணனால் நான் கடத்தப்பட்ட பிறகு பல மாதங்கள் உங்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் இனி உயிரோடு வாழ வேண்டாம் என்ற முடிவு செய்து தற்கொலை செய்ய எண்ணியபோதுதான், அனுமன் வந்து உங்கள் சிறுவயது சம்பவங்களையும், நான் இராவணனால் கடத்தப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களையும், இனி எல்லாம் வெற்றியாகவே அமையும் என சொன்னார். அதை கேட்ட பிறகே எனக்கு தைரியம் கிடைத்தது. நல்லதே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. அதன்படி இராவணனிடம் இருந்து நீங்கள் என்னை மீட்டு சென்றீர்கள். ஆகவே உங்கள் சரித்திரத்திற்கு மகிமை அதிகம் உள்ளது. கவலையில் இருக்கும்போது, யார் உங்கள் சரித்திரத்தை படிக்கிறார்களோ, அவர்களுடைய கவலை தீரும். அத்துடன் அனுமனின் அனுகிரகமும் கிடைக்கும்.” என்றாராம் அன்னை சீதாதேவி.

ஆம், எங்கெல்லாம் ஸ்ரீஇராமநாமமும், ஸ்ரீஇராம காவியமும் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அன்னை சீதாதேவியுடன் ஸ்ரீஇராமர் தோன்றுவார். அவர்களுடன் லட்சுமணனும் ஆஞ்சநேயரும் தோன்றி ஸ்ரீஇராம காவியத்தை கேட்பவர்களின் வாழ்வில் என்றும் துணை இருப்பார்கள்.

இராமநவமி அன்று, பெருமாள் கோயிலுக்கோ அல்லது ஸ்ரீஇராமர் கோயிலுக்கோ சென்று துளசி மாலை அணிவிக்க வேண்டும்.

வெல்லம் ஏலக்காய் இரண்டும் தண்ணீரில் கலந்து பானங்கம், நீர் மோர் வைத்து வணங்கினால் வாழ்க்கையில் இனிமையான சம்பவங்கள் நடக்கும். ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவிக்கலாம்.

அத்துடன் ஸ்ரீஇராம நாமத்தை உங்களால் முடிந்த அளவில் எழுதி அதை மாலையாக கட்டி ஸ்ரீஅனுமருக்கு அணிவித்தால் துன்பங்கள் நெருங்காது. என்றென்றும் வாழ்வில் வெற்றியும் இனிமையும் அமையும்.

2017 Numerology Predictions Click Here

SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய -மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved