Monday, August 1, 2016

உயர்வான வாழ்க்கை தரும் ஸ்ரீவரலஷ்மி விரதம்!



 
Written by Niranjana
 

12.8.2016 அன்று வரலஷ்மி விரதம்!


கைலாயத்தில் சிவனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சிவபெருமான் தன் அருகில் இருந்த சிவகணங்களான சித்திரநோமியை பார்த்து, “நான் தானே ஜெயித்தேன்.” என்றார். அதற்கு சிவகணமும்ஆமாம்என்றது. இதை கேட்ட பார்வதிதேவி கோபம் கொண்டு, “நடுநிலையில்லாமல் தீர்ப்பு சொன்ன நீ குஷ்டரோகம் பிடித்து அவதிப்படுவாய்.” என்று சபித்தாள்.

அந்த நிமிடமே அந்த சிவகணத்தின் உடலில் குஷ்டரோகம் பிடித்துக்கொண்டது. தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான் சித்திரநோமி. சிவபெருமானும் சக்தியிடம் சமாதானம் செய்தார். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல் பார்வதிதேவி சமாதானம் அடைந்து, “சித்திரநோமிநீ துங்கபத்திரா நதிக்கரையில் கங்கையும் யமுனையும் சங்கமமாகும் நேரத்தில், சூரியன் கடகராசியில் இருக்கும்போது சுக்லபட்ச வெள்ளியன்று சுமங்கலி பெண்கள் பூஜிக்கும் போது, அவர்களின் பார்வையில் நீ படவேண்டும். அவர்கள் உனக்கு வரலஷ்மி பூஜையின் மகிமையை பற்றிச் சொல்லுவார்கள். அதன் பிறகு உன் சாபம் நீங்கும்.” என்றார்.

சிவகணமான சித்திரநோமி, பார்வதி கூறியது போல் அங்கிருந்த பெண்களிடம் ஸ்ரீவரலஷ்மி விரதத்தின் மகிமையை கேட்டவுடன் நோய் நீங்கியது. இவ்வாறு விரதத்தின் மகிமையை கேட்டாலே மகிமை என்றால் அதை முறையாக செய்தால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதை ஒரு அரசரின் சரித்திரத்தை படித்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

ஸ்ரீ மகாலஷ்மி, இளவரசி சியாமளாவுக்கு கூறிய வரலஷ்மி விரதத்தின் மகிமை

பத்ரச்ரவஸ் என்ற அரசரும் அவருடைய மனைவி சுரசந்திரிகா என்ற அரசிக்கும் பிறந்தவள் சியாமபாலா. அவளை மாலாதரன் என்ற அரசருக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பினார்கள். தன் மகளான இளவரசி சியாமபாலா இல்லாத அரண்மனை, கலகலப்பு இல்லாமல் இருக்கிறதே என்று வருத்தத்தில் அரசியான சுரசந்திரிகா, தலையை விரித்து போட்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அந்த நேரத்தில் ஒரு வயதான பெண்மணி, “அரசிநீங்கள் இப்படி தலையை விரித்துபோட்டு உட்காரலாமா? அதுவும் விளக்கு வைக்கும் நேரத்தில்.” என்றாள். இதை கேட்ட அரசி கோபம் கொண்டு, “நீ யார் எனக்கு உபதேசிக்க.?” என்று கூறி ஆவேசமாக அந்த பெண்மணியை அடித்து விடுகிறாள். கலங்கிய கண்களுடன் அரண்மனையை விட்டு வெளியேறினாள் அந்த வயதான பெண். அதே நேரத்தில் இளவரசியான சியாமபாலா, தன் தாயை காண அரண்மனைக்கு வந்துக்கொண்டு இருந்தாள்.

அரண்மனையை விட்டு ஒரு வயதான பெண்மணி கண்ணீருடன் வெளியேறுவதை கண்டு அந்த பெண்மணியை அழைத்து நடந்ததை கேட்டறிந்து, மீண்டும் அவளை அரண்மனைக்குள் அழைத்து சென்றாள். நல்லமுறையில் அந்த வயதான பெண்ணுக்கு உணவு பரிமாரினாள் இளவரசி. “இளவரசி நீ இத்தனை அன்பாக இருக்கிறாயே. உனக்கு வரலஷ்மி விரதத்தின் மகிமையை பற்றி கூறுகிறேன்.” என்று சொல்லி, பார்வதிதேவியின் சாபத்தால் நோயால் அவதிப்பட்ட சிவகணத்தை பற்றியும் அதன் பிறகு அதே பார்வதியின் கருணையால் உபதேசம் பெற்று அந்த நோயிலிருந்து விடுபட்டதையும், பார்வதிதேவி வரலஷ்மி நோம்பை அனுசரித்ததால் முருகனை மகனாக பெற்றதையும் சொன்னாள்.

அத்துடன் வரலஷ்மி விரதமானது திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிடைக்கச் செய்யும் என்பதை விரிவாக சொன்னாள் அந்த பெண். அத்தனையும் பொறுமையாக கேட்ட இளவரசி சியாமபாலா மகிழ்ந்து, அந்த வயதான பெண்ணுக்கு பரிசாக தாம்பூலமும், புடவையும், ரவிக்கையும் மற்ற சுபபொருட்களும் தந்தாள். அங்கே ஒரு அற்புத நிகழ்வாக அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அந்த அம்மையார், ஸ்ரீமகாலஷ்மியாக காட்சிகொடுத்து சியாமபாலாவுக்கு ஆசி வழங்கிவிட்டு சென்றாள். தனக்கு ஸ்ரீமகாலஷ்மியே வரலாஷ்மி பூஜை மகிமையை பற்றி அருளி இருக்கிறாரே என்று மகிழ்ந்த சியாமபாலா தன் புகுந்த வீட்டுக்கு திரும்பினாள்.

லஷ்மிதேவியை அவமதித்த அரசியின் கதி

ஒரு சாதாரண அம்மையாராக அரண்மனைக்குள் வந்தவள் ஸ்ரீலஷ்மிதேவி என்பதை அறியாத அரசி சுரசந்திரிக்கா, அந்த அம்மையாரை அடித்து அனுப்பினாள் அல்லவா. அதன் பலனை அரசி விரைவில் அனுபவித்தாள். நாட்டை எதிர் நாட்டு அரசர் திடீர் என போர் செய்து தன் கணவரான அரசர் பத்ரச்ரவஸ்சுடன் நாட்டை விட்டே துரத்தப்பட்டாள். பத்ரச்ரவசும் சுரசந்திரிக்காவும் எதிரிகளுக்கு பயந்து ஒரு காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தார்கள். இந்த செய்தியை கேள்விப்பட்ட இவர்களுடைய மகள் சியாமபாலா, தன் பெற்றோருக்காக ஒரு குடத்தின் நிறைய தங்ககாசுகளை எடுத்துக்கொண்டு காட்டுக்கு சென்று தன் தாயிடம் கொடுத்தாள்.

அதை மகிழ்ச்சியுடன் வாங்கிய அரசி, அடுத்த நிமிடமே அந்த குடத்தில் இருந்த தங்ககாசுகள் அனைத்தும் கரியாக மாறியதை கண்ட அரசியும் அரசரும் மனம் கலங்கினார்கள். இதற்கு காரணம் ஸ்ரீமகாலஷ்மியின் சாபம்தான் என்பதை தன் தாய்க்கு எடுத்துக் கூறி, ஸ்ரீவரலஷ்மி விரதத்தை பற்றியும் சொல்லி, தன்னுடைய அரண்மனைக்கு பாதுகாப்பாக பெற்றோரை அழைத்துச் சென்றாள். அதிர்ஷ்டவசமாக மறுநாள் ஸ்ரீவரலஷ்மி பூஜை செய்யும் நாள் என்பதால் மகிழ்ச்சியுடன் பெற்றோருடன் ஸ்ரீவரலஷ்மி பூஜையை செய்தாள் சியாமபாலா. இந்த பூஜை செய்த பிறகு சில நாட்களிலேயே தங்கள் நாட்டை மீண்டும் கைப்பற்றி அரசராக சிம்மாசனத்தில் அமர்ந்தார் அரசர் பத்ரச்ரவஸ்.

பூஜை முறை  

காலையில் எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி முதலில் விநாயகர் பூஜையை செய்ய வேண்டும். ஈசானிய மூலையில் ஒரு மண்டபம் அமைத்து ஒரு படி நெல்லை சதுரமாகப் பரப்பி அதன் மீது ஒரு தாம்பூலம் வைத்து அதன் மீது அரிசியைப் பரப்பி அரிசியின் மேல் ஒரு குடம் வைத்து அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி, அந்த குடத்தின் சுற்றி சந்தனம் குங்குமம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து அந்த குடத்தின் மேல் மாவிலை சொருகி அதன் மேல் தேங்காயை வைத்து கலசத்தின் மேல் ஸ்ரீமகாலஷ்மி உருவத்தை அமைத்து நகைகளாலும் நறுமண மலர்களாலும் அலங்கரித்த பிறகு லஷ்மி மந்திரங்கள் உச்சரித்து பூஜிக்க வேண்டும். ஒன்பது முடிச்சு உள்ள சரடை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜைக்கு வந்த பெண்களுக்கு சரடுகட்டி வெற்றிலை-பாக்கு பூ தந்து அத்துடன் கொழுக்கட்டையும் வழங்க வேண்டும். ஸ்ரீ வரலஷ்மி பூஜை எண்ணற்ற வரங்களை வாரி தரும்.

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 







For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2016 bhakthiplanet.com  All Rights Reserved