Tuesday, February 24, 2015

வல்லமை நிறைந்த மாசி மகம். சிறப்பு கட்டுரை





04.03.2015 அன்று மாசி மகம்

Written by Niranjana

மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்என்பதுதான். மக நட்சத்திரத்தைபித்ருதேவதா நட்சத்திரம்என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும்.

உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும்.

அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்யவேண்டும். ​ ​ மாசிமக தினத்தன்று புனித நதிகளில்  நீராடுவதைபிதுர் மஹா ஸ்நானம்”  என்கிறது சாஸ்திரம்.



கும்பகோணம்

 முன்னொரு காலத்தில் மிகப்பெரிய பிரளயம் உண்டாகிமேலும் படிக்க 

வல்லமை நிறைந்த மாசிமகம். சிறப்புகட்டுரை