Friday, May 10, 2013

கண் திருஷ்டி யாரை பாதிக்கும்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

கண் திருஷ்டி. ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அவர்களை நோய்கள் அதிகம் தாக்கும். எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை பாதிப்பு செய்யாது. அதை போலவே கண் திருஷ்டி எனபது எல்லோரையும் தாக்காது. யாரை தாக்குகிறது என்றால் –


லக்கினாதிபதி, சுகாதிபதி. இராசியாதிபதி அதாவது ஒன்று மற்றும் நான்காம் இடம், சந்திரன் அமர்ந்த இடம் இவைகள் பாவகிரகங்கள் என்று கூறும் சூரியன்,சனி,செவ்வாய்,இராகு – கேது பார்த்தால் அல்லது அவ்விடங்களில் அமர்ந்தால் அவர்களை கண் திருஷ்டி அதிகமாக பாதிக்கும்.

கண் திருஷ்டி என்பது உள்ளதா? இந்த கேள்விக்கு இருக்கிறது என்பதே பதில். சீனாவில் திருஷ்டிக்காக வீட்டில் பரிகாரங்கள் பல தொங்கிக்கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நம்முடையவர்கள் குழந்தைக்கு திருஷ்டி விழக்கூடாது என்று கன்னத்தில் மைபுள்ளி வைத்திருப்பதை பலர் பார்த்து இருப்பீர்கள்.

 திருஷ்டிக்கு பலம் உள்ளதா என்று கேட்டால், கண் திருஷ்டிபட்டால் கல்லும் உடையும் என்று கூறுவேன். அதனால்தான் முன்னோர்கள், “கல்லடிப்பட்டாலும் கண் அடி படக்கூடாது“ என்று கூறுவார்கள்.

அமாவாசையில் பூசணிக்காய் சுற்றி போடுவது திருஷ்டிக்காகதான். அப்படி செய்தால் அந்த வீட்டில் சுற்றிக்கொண்டு இருக்கும் திருஷ்டி அகன்றுவிடும்.
எப்படி வீட்டில் ஒட்டடை சேர்ந்தால் பூச்சிகள் அதிகமாகுமோ அப்படியே ஒருவனை கண் திருஷ்டி தாக்கினால் நோய் வாய்ப்பட்டால் மருந்தும் வேலை செய்யாது. ஆகவே கண் திருஷ்டி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 
For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved